ராகுல் ராஜ்ஜியம்: கோலி காலி; ஆர்சிபியை நசுக்கிய கிங்க்ஸ் பஞ்சாப்: தமிழக வீரர் முருகன் அஸ்வின், பிஸ்னோய் அருமை: சச்சின் சாதனை முறியடிப்பு

ராகுலின் ஆகச்சிறந்த சதம், நம்பிக்கையளிக்கும் இளம் வீரர்கள் முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய் ஆகியோரின் நெருக்கடி சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 97 ரன்கள் வித்தியாத்தில் தோற்கடித்தது ராகுலின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 97 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/306cn3y
via

No comments:

Post a Comment