ஜெர்மனியில் கரோனா தொற்று 10 லட்சத்தைக் கடந்தது

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 22,806 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,806 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,394 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 426 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 15,586 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Jc0TGo
via

No comments:

Post a Comment