விடுதலை: 35 ஆண்டுகால சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டது ‘காவன் யானை’: பாகிஸ்தானிலிருந்து கம்போடியா சென்றது

உலகிலேயே அதிகமான காலம் தனிமையில் வாழ்ந்த யானை எனப் பெயரெடுத்த காவன் யானை, பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு விமானம் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 1985-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயதில் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட காவன் யானை 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தது. பாகிஸ்தானில் இருக்கும் ஒரே ஆசிய யானை என்பதால், நீண்டகாலம் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்களுக்கு காட்சிப் பொருளாக காவன் பயன்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fPbeUq
via

No comments:

Post a Comment