இந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 136 பேர் பலியான நிலையில், கரோனா பலி எண்ணிக்கை 17,081 ஆக உள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,092 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,43,975 ஆக உள்ளது. மேலும், நேற்று மட்டும் 136 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 17,081 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,54,879 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VAQOFL
via

No comments:

Post a Comment