கடைசி டி 20 போட்டியில் இன்று மோதல்- ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கான்பெராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. கடைசி மற்றும் 3-வது ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oxQSlX
via

No comments:

Post a Comment