ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,097 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,097 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 25,15,009 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 மாகாணங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்குக் கரோனாவுக்கான அறிகுறி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m4b7WV
via
No comments:
Post a Comment