விளையாட்டாய் சில கதைகள்: லாலாவுக்காக நடந்த கலாட்டா

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், தனி மனிதத் துதிபாடல் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தவர் லாலா அமர்நாத். தனக்காக பந்த் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் ரசிகர்களைப் பெற்றிருந்தார் லாலா அமர்நாத்.

1936-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக லாலா அமர்நாத் இருந்தாலும், அவரை விடுத்து விஜயநகரம் மகராஜ்குமாருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையில் அவ்வளவாக நட்பு இல்லை. லாலாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த புகழால் பொறாமையில் இருந்தார் மகராஜ்குமார். இந்த சூழலில் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் 4-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டிய லாலா அமர்நாத்தை 7-வது பேட்ஸ்மேனாக ஆடவைத்தார் மகராஜ்குமார். இதனால் கோபமடைந்த லாலா அமர்நாத், காலில் அணிந்திருந்த பேடைக் கழற்றி கேப்டன் முன்பு வீசினார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lWf2EQ
via

No comments:

Post a Comment