விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்

கிரிக்கெட்டில் ‘இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனாலேயே அவர் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் வளர்ந்தது பெங்களூருவாக இருந்தாலும், அவர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் அப்பா சரத், கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்துள்ளார். அடிக்கடி அவர் ஆடும் போட்டிகளை நேரில் காணச் சென்றதால், ராகுல் டிராவிட்டையும் கிரிக்கெட் ஆசை தொற்றிக் கொண்டுள்ளது. டிராவிட்டுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். சிறுவயதில் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுள்ளார் டிராவிட். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் கவாஸ்கர் முதல் பந்திலேயே அவுட் ஆக, ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் டிராவிட்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3otpCp0
via

No comments:

Post a Comment