எவரெஸ்ட்டில் ஏறிய 75 வயது அமெரிக்கர்!

அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கும் 75 வயது ஆர்தர் முர், எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறித் திரும்பியிருக்கிறார். எவரெஸ்ட்டில் ஏறிய வயதான அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்!

வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஆர்தருக்கு மலையேற்றத்தில் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. கடினமாகப் பயிற்சிகளை மேற்கொண்டார். எந்த மலையேற்ற வீரருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுதான் லட்சியமாக இருக்கும். ஆர்தருக்கும் அது இருந்தது. 5 ஆண்டுகள் மேற்கொண்ட கடினப் பயிற்சிகளுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறினார். ஆனால், மலையேறும்போது கீழே விழுந்ததில் அவருடைய தோள்பட்டையில் மோசமான காயம் ஏற்பட்டதால், அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wYGIPx
via

No comments:

Post a Comment