நியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2018 ஆம் ஆண்டைப் போல பாவித்து மீண்டும் சதமடிக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனால் பல பரிமாணங்கள் இருக்கும் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு எதிராக அது அவ்வளவு எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் பதிப்பில் நடக்கும் முதல் இறுதிப் போட்டி இது. ஏற்கெனவே நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடி வருவதன் மூலம் இதற்கான பயிற்சியைப் பெற்று வருகிறது. இந்திய வீரர்களும் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wtfoca
via

No comments:

Post a Comment