இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளனர்.
கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்த அணி விளையாடவுள்ளது. கரோனா நெருக்கடியால், இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் முடித்தபிறகே தாயகம் திரும்பவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RXaRQh
via
No comments:
Post a Comment