நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டதால் ஓய்வூதியத்தை இழக்கும் 85 இலங்கை எம்.பி.க்கள்

ராமேசுவரம்: இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்களுக்கு முன்னதாகவே கலைக்கப் ட்டதால் முதல்முறையாக தேர்வான 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யின்தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதேகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய, இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில், செப்.24-ம் தேதி இரவு அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இலங்கையின் தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற துக்கான தேர்தல் நவ.14-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுத் தாக்கல் அக். 4-ம் தேதிதொடங்கி அக்.11-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவ.21 அன்று கூடும் என்றும் அறிவித்தது. இலங்கையின் 1977-ம் ஆண்டு ஓய்வூதிய சட்டவிதிகளின்படி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த சட்ட விதிகளின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் 5 ஆண்டுகள் முழுமையாக பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பூர்த்தி செய்திருந்தால் இலங்கை ரூபாயில் மாதம் 45 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். அதே சமயம் இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இலங்கை ரூபாயில் மாதம் 55 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iJTj8tg
via

No comments:

Post a Comment