2-வது ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

புதுடெல்லி: இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PIFoJz8
via

No comments:

Post a Comment