இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000 பேர் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.

இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் குழந்தைகள். 3,100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MZUsepk
via

No comments:

Post a Comment