இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பயங்கர துப்பாக்கிச் சூடு - பலர் உயிரிழந்ததாக தகவல்

டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் இன்று (அக்.01) பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாஃபா பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fvh5eyi
via

No comments:

Post a Comment