சென்னை-ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம்: ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த 22-ம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். 2-வது நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு டெல்லி திரும்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8jasNEk
via

No comments:

Post a Comment