எதிரிக்கு வலிமையை புரியவைக்க வேண்டும் - ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கருத்து

தெஹ்ரான்: ஈரானின் வலிமையை எதிரிக்கு (இஸ்ரேல்) புரிய வைக்க வேண்டும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. அப்போது ஈரானின் ரேடார் சாதனங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ராணுவ தளங்கள் மீது சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் 4 ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M1wvhOC
via

No comments:

Post a Comment