இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான செயலை அனுமதிக்க மாட்டோம்: புதிய அதிபர் திசநாயக்க உறுதி

கொழும்பு: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர்அநுர திசநாயக்கை நேற்று முன்தினம் அவர் சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார உதவிமிக முக்கியமானது என்று அநுர திசநாயக்க தெரிவித்த நிலையில், இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து பங்களிப்பையும் இந்தியா வழங்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JtquEAi
via

No comments:

Post a Comment