இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டு மழை: ஈரானில் ராணுவ தளங்கள் தரைமட்டம்

டெல் அவிவ்: ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டுமழை பொழிந்தன. இதில் ஈரான் ராணுவ தளங்கள் தரைமட்டமாகின.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9wFj5kI
via

No comments:

Post a Comment