இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை நல்ல தொடக்கம் ஆகும். இங்கிருந்தே இரு நாடுகளும் முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/blGge81
via

யஹ்யா சின்வர் உயிரிழப்பு: ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? 

காசாவில் இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் வெள்ளிக்கிழமை (அக்.18) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் தலைவரின் இறப்புக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யஹ்யா சின்வர் மரணம் ஹமாஸ் அமைப்பின் தலைமையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து உத்வேகத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. கடந்த ஜூலையில் அப்போதைய ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றார் சின்வர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UYwi3lN
via

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

ஹைதராபாத்: புரோ கபடி லீக் 11-வது சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

2-வது கட்ட போட்டிகள் நொய்டாவிலும், 3-வது கட்ட போட்டிகள் புனேவிலும் நடைபெறுகின்றன. டிசம்பர் 24-ம் தேதி வரை லீக் சுற்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 22 ஆட்டத்தில் விளையாடும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fh2mOzG
via

இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஒப்புதல்

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வருகிறார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்த அவர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர்சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புஇருப்பதாக பிரதமர் ஜஸ்டின் அண்மையில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார்வர்மா உட்பட 6 இந்திய தூதரகஅதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்தியஅரசு வெளியேற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c4GCm9a
via

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா உயிரிழப்பு - டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h8uGic1
via

ஹமாஸ் தலைவர் யஹ்யா கொலை? - டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்ய இஸ்ரேல் திட்டம்

டெல்அவிவ்: அக்.7 இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இறந்தது அவர்தானா என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்ய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KrzOQCH
via

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியுடன் சென்னையின் எஃப்சி இன்று பலப்பரீட்சை

குவாஹாட்டி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 சீசன் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் திரும்ப உள்ளது. இதன்படி இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களை டிரா செய்திருந்தன.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவாவுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. அதேவேளையில் சென்னையின் எப்சி அணி, 10 பேருடன் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது. ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னையின் எஃப்சி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி 7 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r6n2Pbz
via

கம்ரன் குலாம் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணி 259 ரன்கள் சேர்ப்பு

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. கம்ரன் குலாம் சதம் விளாசினார்.

முல்தானில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் போல்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k1zU3xe
via

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஐ,நா. அவையில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்படக்கூடியவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aP3CnEU
via

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்

மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நேற்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nmRUN1r
via

இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசம்: அமெரிக்க ராணுவம் வழங்குகிறது

டெல் அவிவ்: ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தை அமெ ரிக்க ராணுவம் வழங்க உள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், சிரியா, ஜோர்டானை சேர்ந்த தீவிரவாதிகள் என பல்வேறு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் போரிட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iy7lh1F
via

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமனம்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ngkRTU
via

ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்துக்கு ஏலம்

புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பாக இந்திய ஹாக்கி அணியின் கேட்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எச்ஐஎல் போட்டி நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p4teOfo
via