இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஒப்புதல்

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வருகிறார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்த அவர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர்சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புஇருப்பதாக பிரதமர் ஜஸ்டின் அண்மையில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார்வர்மா உட்பட 6 இந்திய தூதரகஅதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்தியஅரசு வெளியேற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c4GCm9a
via

No comments:

Post a Comment