நேபாளத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறுத்து நேபாள மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “நேபாளத்தில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/309C3Mu
via

No comments:

Post a Comment