சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நொறுக்கி விட்டது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்ற சிஎஸ்கே, சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடியில் 2வது போட்டியில் மண்ணைக் கவ்வியது.
லுங்கி இங்கிடி கடைசி ஓவரில் 2 நோபால்கள், ஒரு வைடு ஆகியவற்றுடன் ஆர்ச்சருக்கு 4 சிக்சர்களை தொடர்ச்சியாக வழங்கி 30 ரன்களைக் கொடுத்ததுதான் சிஎஸ்கேவின் தோல்விக்குப் பிரதான காரணம் என்றால் மிகையாகாது. தோனி இங்கிடி ஓவரைக் குறிப்பிட்டுத்தான், நோபால்களைக் கட்டுப்படுத்த வேண்டும், நோ-பால்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் 200 ரன்கள்தான் இலக்கு வென்றிருப்போம் என்ற தொனியில் தோனி ஆட்டம் முடிந்த பிறகு கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kGMv6g
via
No comments:
Post a Comment