இரண்டாம் கட்டக் கரோனா பரவல்: இஸ்ரேலில் கட்டுப்பாடுகள் தீவிரம்

இஸ்ரேலில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இஸ்ரேலில் கரோனாவுக்கு 1,316 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32VfoW3
via

No comments:

Post a Comment