தீவிரவாதி குறித்து தகவல் தந்தால் ரூ.37 கோடி பரிசு; மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாக அமெரிக்க அரசு அறிவிப்பு

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் மிர்ருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சதித் திட்டம் தீட்டியது, அதை செயல்படுத்தியது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது என்று அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33qD8kQ
via

No comments:

Post a Comment