திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மீது பெண் பாலியல் புகார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆஸம், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கிவிட்டார் என்று பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணி தற்போது நியூஸிலாந்து பயணத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து சென்றுள்ள அந்த அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் கேப்டன் பாபர் ஆஸம் மீது பெண் ஒருவர், பரபரப்புக் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பாகிஸ்தான் அணி வீரர்கள் 7 பேர் ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில், கேப்டன் பாபர் மீதான இந்தக் குற்றச்சாட்டு மேலும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36iG44V
via

No comments:

Post a Comment