இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும்: சீனா அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தகவல்

இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், ஆத்திரமூட்டும் வகையில் சீனா தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்காவின் எம்.பி.தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்துமுயற்சித்து வருகிறது. லடாக்கில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே (எல்ஏசி) சீன வீரர்கள் ஆக்கிரமித்த போது, இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இதுவரை 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பும் படைகளை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 9-வது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lrwHUY
via

No comments:

Post a Comment