கரோனா, ஹாங்காங் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து புகார் கூறிவருவதால் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு சீனா எச்சரிக்கை

கரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. இதனால் சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. அதற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசும் கருத்துகள் தெரிவித்தது. அத்துடன், ஹாங்காங் மக்களை சீன அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியது. தவிர ஜப்பானுடன் இணைந்து ஆஸ்திரேலியா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மேலும், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பைவ் ஐ’ என்ற பெயரில் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் இந்நாடுகள் உளவு தகவல்கள் பரிமாறிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த நாடுகளும் சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பிரச்சினையை கையில் எடுத்துள்ளன. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ‘பைவ் ஐ’ நாடுகள் மீது சீனா கடும் கோபம் அடைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/330fdII
via

No comments:

Post a Comment