மெக்சிகோவில் கரோனா பலி ஒரு லட்சத்தைக் கடந்தது

மெக்சிகோவில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத்துறை தரப்பில், “மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 576 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,00,104 ஆக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ksbb5B
via

No comments:

Post a Comment