விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் ஹெல்மெட் பிறந்த கதை

இன்றைய தினம் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டுக்கு அடுத்து முக்கிய தேவையாக இருப்பது ஹெல்மெட்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களின் தலையில் காயம் ஏற்படாதவாறு அவர்களை ஹெல்மெட்கள் காக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடும்போதும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என சட்டம் இயற்றுமாறு சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் கிரிக்கெட் அறிமுகமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 1930-களில் ஹெல்மெட் போன்ற ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு இந்த தலைக்கவசத்தை அவரது மனைவி உருவாக்கிக் கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36WYLKn
via

No comments:

Post a Comment