ஈரானில் கரோனா தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஈரானில் கரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈரான் அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் கூறும்போது, “ ஈரானில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் கரோனாவுக்கு 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஈரானில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/336yDvt
via

No comments:

Post a Comment