பிரான்ஸில் கரோனா பலி 55,000-ஐ கடந்தது

ஐரோப்பாவில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 55,000 -ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ” நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 55,155 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 11,022 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கரோனாவுக்கு 22 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36MMae4
via

No comments:

Post a Comment