விளையாட்டாய் சில கதைகள்: தடைகளைக் கடந்துவந்த கால்பந்து

உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்ற பெருமை கால்பந்து விளையாட்டுக்கு உண்டு. ரசிகர்களின் எண்ணிக்கையைப் போன்றே தோற்றத்திலும் முதன்மையானது கால்பந்து விளையாட்டு. கற்காலத்திலேயே, அதாவது 3,000 ஆண்டுகளுக்கும் முன்பே மெசோஅமெரிக்கன் கலாச் சாரத்தில் (Mesoamerican cultures) கால்பந்து விளையாட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் உருண்டை யான கற்களை வைத்து கால்பந்து போட்டிகளை ஆடியுள்ளனர். கல்லால் ஆன இந்தப் பந்துகள் சூரியனை குறிப்பதாக கருதப்பட்டது. அதேபோல் போட்டியில் தோற்கும் அணியின் கேப்டனை நரபலியிடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்ததாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.

ஆசியாவில் தோலால் செய்யப்பட்ட பந்துகளால் கால்பந்து போட்டிகளில் ஆடும் வழக்கம் முதலில் சீனாவில் தோன்றி, அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி யுள்ளது. அதே நேரத்தில் தோலால் செய்யப்பட்ட பந்தில் முடிகளை நிரப்பி கிரேக்க நாட்டவர்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரோமானியர்களும் இங்கிலாந்து நாட்டினரும் கால்பந்து விளையாட்டை ஆடத் தொடங்கினர். இப்படி அங்கொன்றும் இங்கொன்று மாக ஆடப்பட்டு வந்த கால்பந்து விளையாட்டு,கிபி 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவலாக ஆடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mTocTS
via

No comments:

Post a Comment