இத்தாலியில் கரோனா பலி 60,000-ஐக் கடந்தது

இத்தாலியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 18,887 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 662 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 60,078 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 1,63,550 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37L6Pyr
via

No comments:

Post a Comment