தென் கலிபோர்னியாவில் கரோனா ஊரடங்கு

தெற்கு கலிபோர்னியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “தெற்கு கலிபோர்னியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மாகாண அரசு அங்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K1nOUJ
via

No comments:

Post a Comment