ரூ.7.4 கோடி; பெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் பரிசு

பெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் பரிசாக ரூ.7.4 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆச்சரியமூட்டும் விதமாகப் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான 10 போட்டியாளர்களிடமும் சமமாகப் பகிர்ந்துகொள்வதாக விருதாளர் அறிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு யுனெஸ்கோ பொருளுதவி அளித்து வருகிறது. இந்தப் பரிசுத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் 140 நாடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து இறுதிக்கட்டத்துக்கு 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39EGnZJ
via

No comments:

Post a Comment