விளையாட்டாய் சில கதைகள்: அண்ணன் காட்டிய வழியில்

கபில்தேவின் காலத்துக்குப் பிறகு அமைதியான தென்றலாய் இருந்த இந்திய கிரிக்கெட் அணியை ஆக்ரோஷமான புயலாய் மாற்றியவர் சவுரவ் கங்குலி. அவர் கேப்டனாவதற்கு முன் மற்ற அணி வீரர்கள்தான் இந்திய வீரர்களை கிண்டலடித்து பேட்டிங் செய்யும்போது உசுப்பேற்றுவார்கள் (ஸ்லெட்ஜிங்). இதன்மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்யும்போது நமது வீரர்கள் அமைதியாய் இருப்பார்கள். ஆனால் கங்குலி கேப்டனாக வந்த பிறகு நிலைமை தலைகீழானது. ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்ற கொள்கையைக் கொண்ட கங்குலி, எதிரணிகளின் வழியிலேயே சென்று அவர்களை உசுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது.

கேப்டனாக மட்டுமின்றி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக உருவெடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன் 100-க்கும் அதிகமான விக்கெட்களையும் கங்குலி வீழ்த்தியுள்ளார்.கங்குலியைத் தவிர காலிஸ், சச்சின், ஜெயசூர்யா, தில்ஷன் ஆகிய 4 வீரர்களே இச்சாதனையை செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Iz1Gkv
via

No comments:

Post a Comment