இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடந்தால் மகிழ்ச்சியே; ஆனால்?- ஐசிசி தலைவர் கருத்து

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை ஐசிசி ஆதரிப்பதாகவும், ஆனால் அது நடப்பதை உறுதி செய்ய முடியாது என்றும் ஐசிசி புதிய தலைவர் ஜான் பார்க்லே கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மட்டும் பங்குபெறும் கிரிக்கெட் தொடர்கள் இரு நாட்டு அரசியல் சூழலை வைத்தே முடிவு செய்யப்படும். இந்த இரு அணிகளும் கடைசியாக டெஸ்ட் தொடரில் விளையாடியது 13 வருடங்களுக்கு முன்னால். 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அதற்கு முந்தைய வருடம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KLRLIT
via

No comments:

Post a Comment