இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஒளிபரப்பு, டிஆர்பி என்று சொல்லப்படும் தொலைக்காட்சி ரசிகர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. இதை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் என்கிற சேனல் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்த ஆட்டத்தைப் பார்க்கக் கிட்டத்தட்ட 5,85,000 பேர் ஃபாக்ஸ்டெல் மற்றும் காயோ சேனல்களை நாடியுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியையும் கிட்டத்தட்ட 4,70,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JyLVdc
via
No comments:
Post a Comment