விளையாட்டாய் சில கதைகள்: பதக்கம் வெல்லாவிட்டால் தண்டனை

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பொதுவாக அனைத்து வீரர்களும் ஆடுவார்கள். அதேநேரத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று பயிற்சியைத் தொடர்வார்கள்.

ஆனால் இதெல்லாம் மற்ற நாட்டு வீரர்களுக்குத்தான். வடகொரிய வீரர்களைப் பொறுத்தவரை தாங்கள் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான மனநிலையுடன்தான் போட்டிகளில் பங்கேற்பார்கள். வெற்றி பெறாமல் நாட்டுக்குத் திரும்பினால் கடுமையான தண்டனை கிடைக்குமே என்ற அச்சமே இதற்கு காரணம். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி போன்றவற்றில் ஆடும் வீரர்களுக்கு மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே பல்வேறு வசதிகளை வட கொரிய அரசும் செய்து கொடுக்கும். ஆனால் அவர்கள் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பினால் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது அந்நாட்டு அரசின் குணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3708eC9
via

No comments:

Post a Comment