கரோனாவால் உண்டான வேலையின்மை; நடுத்தர வயதினரிடையே இதய நோய்களை வரவழைக்க அதிக வாய்ப்பு: ஆய்வில் தகவல்

உலக அளவில் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட வேலையின்மை, நடுத்தர வயதில் உள்ள மனிதர்களுக்கு இதய நோய்களை அதிகம் வரவழைக்க வாய்ப்பு உள்ளது என்று நியூஸிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸால் மக்கள் தங்கள் இன்னுயிரையும் இழக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்தனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால், பொருளாதார வளர்ச்சி மிக மோசமாகச் சரிந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவு, வேலையின்மை, ஊதியக் குறைப்பு எனப் பல சம்பவங்கள் நடந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qDsBwJ
via

No comments:

Post a Comment