10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து: ஐக்கிய அரபு அமீரகம் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ''கடந்த 24 மணி நேரத்தில் 3,243 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினரையும் சேர்த்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35B9gDx
via

No comments:

Post a Comment