கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்துக்கு 10 கோடி டாலர்: பரிசு அறிவித்தார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்போருக்கு 10 கோடி டாலர் பரிசு அளிக்கப்படும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

புவி வெப்பமடைவது உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும். இதைத் தடுப்பதற்காக கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை அனைத்து உலக நாடுகளும் எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் மிகப் பெருமளவிலான முன்னேற்றம் எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில் புவி வெப்பமடைவதைத் தடுக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் புதிய மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவோருக்கு 10 கோடி டாலர் பரிசளிக்கப்படும் என தனது ட்விட்டர் பதிவில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iFleRz
via

No comments:

Post a Comment