இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது; 11 வீரர்களுடன்தான் விளையாடியுள்ளோம்; 150 கோடி பேர் இருக்கிறார்கள்: ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் பாராட்டு

இந்திய வீரர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாங்கள் 11 வீரர்களுடன்தான் விளையாடியிருக்கிறோம். இந்தியாவில் 150 கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொடரிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டோம் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியைச் சாய்த்து வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுதியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Nalrk6
via

No comments:

Post a Comment