கரோனா வைரஸுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் 3 மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்தியர் கைது

கரோனா வைரஸுக்கு பயந்து அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான ஆரஞ்ச் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்யா சிங் (வயது 36) என்பவர், நண்பர்களுடன் வசித்து வந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விமானம் மூலம் சிகோகாவின் ஓ'ஹேர் விமான நிலையத்துக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவர் சென்றார். விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் சுமார் 3 மாதங்கள் ஆதித்யா சிங் பதுங்கி வாழ்ந்துள்ளார். கடந்த 16-ம் தேதி மதியம், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர், அவரை பார்த்து சந்தேகம் அடைந்தனர். அடையாள அட்டையை கேட்டனர். அப்போது ஆதித்யா சிங் ஓர் அடையாள அட்டையை காண்பித்தார். அதில் இருந்த புகைப்படத்துக்கும் ஆதித்யா சிங்குக்கும் வேறுபாடு இருந்ததால் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்த ஆதித்யா சிங் கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38XMw2l
via

No comments:

Post a Comment