கரோனா தடுப்பூசிக்கு பிறகு நார்வேயில் 29 பேர் உயிரிழப்பு

நார்வே நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு பிறகு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உடல்நலக் கோளாறு உடைய முதியவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து அந்நாடு கவலை தெரிவித்துள்ளது.

‘பைசர் – பயோஎன்டெக்’ நிறுவனத்தின் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நார்வே நாட்டில் சுமார் 42,000 பேருக்கு இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இதில் முதியவர்கள் உட்பட கரோனா தொற்றுக்கான ஆபத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு புதிதாக 6 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் மொத்தஉயிரிழப்பு 29 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35SFxWv
via

No comments:

Post a Comment