இராக்கின் பாக்தாத் நகரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2 தற்கொலை படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் நேற்று 2 இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில்32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து இராக் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய பாக்தாத்தின் வர்த்தக மையத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன’’ என்றனர். டயாரன் சதுக்கம் என்றுஅழைக்கப்படும் இந்த மார்க்கெட்டில் பெரும்பாலும் இரண்டாம் தர துணிவகைகள் விற்பனை அதிகமாக நடைபெறும். அதனால் ஏராளமான மக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39OTm9M
via

No comments:

Post a Comment