லஞ்ச வழக்கில் சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீக்கு 30 மாத சிறை

தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹைக்கு சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீ லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2017-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மேல்முறையீடு செய்ததன் மூலம் இவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் வழக்கை உச்ச நீதிமன்றம் சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. சியோல் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p0pNbv
via

No comments:

Post a Comment