ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணியில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷுப்மான் கில் ஆகியோருக்கு தார்-எஸ்யுவி ஜீப் பரிசாக வழங்கப்படும் எனத் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LPeepC
via
No comments:
Post a Comment