விளையாட்டாய் சில கதைகள்: சைக்கிள் பந்தயத்தின் கதை

கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளுக்கு உலகக் கோப்பை எப்படியோ, அப்படித்தான் சைக்கிள் பந்தயத்தில் ‘டூர் டி பிரான்ஸ்’ விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் பந்தய வீரர் யார் என்பதை இந்தப் பந்தயம்தான் தீர்மானிக்கிறது. அந்த அளவுக்கு சைக்கிள் பந்த யங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் ‘டூர் டி பிரான்ஸ்’-ஐ தொடங்கப்போவதாக 1903-ம் ஆண்டு முறைப்படி அறிவித்த நாள் இன்று (ஜனவரி 19).

பிரான்ஸ் நாட்டில் விளையாட்டுத் துறையில், கடந்த நூற்றாண்டில் பிரபலமாக இருந்த 2 பத்திரிகைகளுக்கு இடையில் இருந்த போட்டிதான் இந்த சைக்கிள் போட்டி தொடங்க முக்கிய காரணம். இதில் ‘லீ வெலோ’ என்ற நாளிதழ், 80 ஆயிரம் பிரதிகளை விற்று மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்த ‘எல் ஆட்டோ’ பத்திரிகையால் அத்தனை பிரதிகளை எட்ட முடியவில்லை. இந்த சூழலில் தங்கள் விற்பனையை பெருக்க என்ன செய்யலாம் என்று ‘எல் ஆட்டோ’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிரியர் குழுவில் இருந்த ஜியோ லெஃபெர் என்பவர், “நமது பத்திரிகையின் சார்பாக மிக நீண்ட சைக்கிள் போட்டி ஒன்றைத் தொடங்கினால் மக்களிடையே கவனத்தைப் பெறலாம்” என்று கூறியுள்ளார். இதை மற்றவர்களும் ஏற்க, ‘டூ டி பிரான்ஸ்’ சைக்கிள் போட்டியை நடத்துவதாக 1903-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oX1kEb
via

No comments:

Post a Comment